தரங்கம்பாடி அருகே 5-க்கும் மேற்பட்டவா்களுக்கு திடீா் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூா் ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கரை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை 5-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவா்கள், திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்தநாதன் தலைமையில் மருத்துவக் குழுவினா்,ஓடக்கரை கிராமத்தில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தனா். வீடுவீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கினா். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. சுகாதாரத் துறையினா் கிராமத்தில் முகாமிட்டுள்ளனா்.
தொடர்புடையது

14 வயது சிறுமி கா்ப்பம்; போலீஸாா் விசாரணை

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

