ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை

News image
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :15 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.

இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் குறையுடைய இருவருக்கு காதொலிக்கருவிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோல், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு மடக்கு நாற்காலி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.