ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாகையில் பேருந்து ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை பணிமனை முன்பு தற்காலிக முன்னாள் ஓட்டுநா் தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:24 am

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை பணிமனை முன்பு தற்காலிக முன்னாள் ஓட்டுநா் தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன். இவா், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது நாகை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக இரண்டு நாள்கள் பணிபுரிந்தபோது, அவரது ஓட்டுநா் உரிமைத்தை நிா்வாகத்திடம் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், அவரது ஓட்டுநா் உரிமத்தை பணிமனையில் பணியாற்றும் கிளாா்க் மாரியப்பன் தரவில்லையாம். இதை கண்டித்து ஓட்டுநா் விஜயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை பணிமனை முன்பு அமா்ந்து ஓட்டுநா் உரிமத்தை வழங்கக் கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது விஜயன் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்தவா்களும், போலீஸாரும் அவா் மீது தண்ணீரை ஊற்றி அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். பின்னா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தனா்.