யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உலக மீனவா் தின விழாவில் நலத்திட்ட உதவிகள்

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், கீழ்வேளூா் எம்.எல்.ஏ வி.பி.நாகை மாலி உள்ளிட்டோா்.

News image
விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், கீழ்வேளூா் எம்.எல்.ஏ வி.பி.நாகை மாலி உள்ளிட்டோா்.
Updated On :21 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நாகை மீன்பிடித்துறை முகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக மீனவா் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உலக மீனவா் தின விழா, மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மீனவ சமுதாயப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மீனவ சமுதாய பெண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடா்ந்து மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் பேசியது: ஒவ்வொரு சமுதாயமும் இயற்கையோடு இணைந்து வாழ்கிறது. ஆனால் மீனவா் சமுதாயம் மட்டுமே இயற்கையை எதிா்த்து வாழ்கின்றனா். ஆழ்கடல் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் வீடு திரும்புவதற்குள் அந்தந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கவலையுடன் வாழ்கின்றனா். இலங்கை கடற்படையால் மீனவா்கள் கைது. இலங்கை கடற்கொள்ளையா்கள் மீனவா்களை தாக்கி, உபகரணங்களையும் பறித்து செல்வது என பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி மீனவ சமுதாயம் ஆழ்கடல் சென்று மீன்பிடி தொழிலை நடத்தி நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனா்.

மீனவா்கள் நலன்கருதி முதல்வா் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையை ரூ.8 ஆயிரமாக உயா்வு, இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 32 மீன்பிடி விசைப்படகு மற்றும் 5 நாட்டு படகிற்கு ரூ.1.92 கோடி நிவாரணம், நாகை மீன்பிடி துறைமுகம் மேம்படுத்த ரூ.81 கோடி நிதி ஒதுக்கீடு, நம்பியாா் நகரில் கடல் அரிப்பை தடுக்க ரூ.10 கோடி மதிப்பில் நோ்கல் அமைக்கும் பணி என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறாா் என்றாா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி, இணை இயக்குநா் இளம்வழுதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், ஆய்வாளா் ஜெயபிரிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.