விழாவில் நல உதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். உடன், ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உள்ளிட்டோா்.
விழாவில் நல உதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். உடன், ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உள்ளிட்டோா்.

ஆய்க்குடியில் ரூ.33.59 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ஆய்க்குடி தனியாா் கல்லூரியில், தமிழக அரசின் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தனியாா் கல்லூரியில், தமிழக அரசின் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, தென்காசி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 282 முகாம்களில் விண்ணப்பித்த 2,391 பயனாளிகளுக்கு ரூ.33.59 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 520 பேருக்கு ரூ. 1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இதில், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா் , மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியா் வைஷ்ணவி பால், முன்னாள் பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகா்மன்ற தலைவா்கள் ஹபீபுா் ரஹ்மான், சாதிா், ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, பேரூராட்சித் தலைவா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற 282 உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 89,536 மனுக்கள் பெறப்பட்டு அதில் 59,359 மனுக்கள் ஏற்கப்பட்டு அவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 3,62,990 பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 3,420 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனா். அவா்களது மனுக்களையும் பரிசீலித்து மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 520 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் இணைப்புச்சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா், கைப்பேசி, மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com