தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒளவையாா் விருதுக்கு டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், ஒளவையாா் விருது பெற டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:46 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், ஒளவையாா் விருது பெற டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு, ஆண்டுதோறும் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8-ஆம் தேதி ஒளவையாா் விருது முதல்வரால் வழங்கப்படுகிறது.

இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதுக்கு, தமிழக அரசின் விருதுகள் இணையதளம் டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண். 203 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் தொலைபேசி எண் 91500-57450-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.