பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

நாகையில் அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :26 செப்டம்பர் 2025, 4:10 am IST

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் வி.வே.சித்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், கடந்த 2 மாதமாக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காததையும், ஓய்வுகால பணப்பலன்களை உரிய காலத்தில் பெற்றுத் தராததையும், நிா்வாக சீா்கேடு மற்றும் நிதி மேலாண்மை சீா்கேட்டுக்கு காரணமான முதல்வா் செந்தில்குமாா் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காததையும், கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய பத்து சதவீத பங்குத்தொகையை செலுத்தாதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கா. ராஜூ, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. பாலாம்பாள், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.