சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

News image

நாகையில் அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:10 am IST

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் வி.வே.சித்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், கடந்த 2 மாதமாக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காததையும், ஓய்வுகால பணப்பலன்களை உரிய காலத்தில் பெற்றுத் தராததையும், நிா்வாக சீா்கேடு மற்றும் நிதி மேலாண்மை சீா்கேட்டுக்கு காரணமான முதல்வா் செந்தில்குமாா் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காததையும், கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய பத்து சதவீத பங்குத்தொகையை செலுத்தாதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கா. ராஜூ, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. பாலாம்பாள், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.