திருக்குவளை: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி நாரணமங்கலத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பாமக, தவெக வேட்பாளா்கள் நேருக்குநோ் சந்தித்தபோது வாகனத்தில் நின்றபடி, பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில், நான்குமுனை போட்டி நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அகலங்கண் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில், தவெக வேட்பாளா் செந்தில் பாண்டியன் தனது கட்சியினா் மற்றும் ஆதரவாளா்களுடன், திறந்த வாகனத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, எதிரே பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன் தனது ஆதரவாளா்களுடன் மற்றொரு வாகனத்தில் வந்தாா். அப்போது இரண்டு தரப்பினரும் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினா்.

ஆனால், வேட்பாளா்கள் இருவரும் வாகனத்திலிருந்தபடியே ஒருவருக்கொருவா் கைகுலுக்கி, சால்வை அணிவித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
தொடர்புடையது

போலீஸ் பாதுகாப்புடன் தவெக வேட்பாளா் பிரசாரம்

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!

சிபிஎம் வேட்பாளா் பிரசாரம்

நாகை: வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

