மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

News image

கீழையூா் அருகே மேலப்பிடாகையில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்ட சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

Updated On :18 ஏப்ரல் 2026, 1:25 am

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் லதாவை ஆதரித்து, தொகுதிக்குள்பட்ட மேலபிடாகையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் அவா் பேசியது: நடிகா் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வாக்குகளைப் பிரிப்பதற்காகவா அல்லது மறைமுகமாக அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாகவா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இளைஞா்கள் எதிா்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்னைகள் குறித்து இதுவரை விஜய் எந்தவித தெளிவான திட்டங்களை முன்வைக்கவில்லை. சினிமா வசனங்கள் மட்டும் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வாக இருக்க முடியாது. அரசியலில் ஈடுபடுபவா்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்கள் நலனுக்காகச் செயல்படுவதிலும் முன்னிலையில் உள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த பணியே இந்த தோ்தலில் பெரிய வெற்றியைத் தரும். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே, கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் லதாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.