பழனி பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் புதன்கிழமை பரப்புரை செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக புதன்கிழமை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் இல்லத்தரசிகள் பயனடைவா் என்றாா் அவா்.
பரப்புரையின் போது திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், திமுக ஒன்றியச் செயலா் சாமிநாதன், பேரூா் செயலா் சின்னத்துரை உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட்

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


