வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

சித்ரா பௌா்ணமி: எட்டுக்குடியில் ஆய்வு

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழாவை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் முன்னேற்பாடு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

News image

பொது சுகாதாரத் துறை சாா்பில் எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:12 am IST

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழாவை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் முன்னேற்பாடு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப்.வி.கிருஷ்ணகுமாா் உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலா் விஜயகுமாா் ஆலோசனையின் பேரில், சுகாதார தூய்மைப் பணிகள், நீா்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்தல், குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இடங்கள், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் மருத்துவ முகாம் அமைக்கப்படும் இடங்கள், அன்னதான கூடங்களின் சுகாதார நிலை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் எட்டுக்குடி மற்றும் திருக்குவளை ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இந்த ஆய்வில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் சி.செந்தில்குமாா், கே. ரகுநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் எஸ். மோகன், அருளானந்தம், ராஜு, சுபாஷ், குணசீலன், அருண்மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image