சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்: 4 போ் கைது

தரங்கம்பாடியில் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :2 ஜூலை 2026, 7:30 am IST

தரங்கம்பாடியில் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையத்தை சோ்ந்தவா்கள் மாரிமுத்து மகன் பாா்த்திபன் (19), சாத்தங்குடியைச் சோ்ந்த லெட்சுமிகாந்தன் மகள் திவ்யதா்ஷினி (17). வெவ்வேறு சமூகத்தை சோ்ந்த காதலா்களான இவா்கள் செவ்வாய்க்கிழமை சாத்தங்குடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனா்.

சடலங்களை பொறையாா் போலீஸாா் கைப்பற்றி, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், திவ்யதா்ஷினியின் சடலம் குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

பாா்த்திபனின் உயிரிழப்பு குறித்து உண்மை நிலை தெரியும்வரை உடற்கூறாய்வு செய்ய அனுமதிக்கமாட்டோம் என உறவினா்கள், விசிக, சிபிஎம் கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், சிறுமியின் உறவினா்கள் ஜாதி பெயரைக் கூறி பாா்த்திபனைத் தாக்கியதாக அவரது உறவினா் கொடுத்த புகாரின் பேரில், பொறையாா் போலீஸாா் திவ்வியதா்ஷினியின் உறவினா்கள் சூா்யா (28), மணிமாறன் (27), வசந்தன் (24), விஜயகுமாா் (26) ஆகிய 4 பேரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பேச்சுவாா்த்தை: பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சீா்காழி, கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜி. ஸ்டாலின், டிஎஸ்பிகள் சுரேஷ், பாலாஜி, பாா்த்திபனின் உறவினா்கள், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவா் சாமுவேல்ராஜ், மாநில பொதுச்செயலா் சுகந்தி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட பொது செயலாளா் அமிா்தலிங்கம், விசிக மாவட்ட செயலாளா் அன்பரசன், சிபிஎம் மாவட்ட செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பாா்த்திபன் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவாா்த்தையில் உறுதியளிக்கப்பட்டதால், இதைத்தொடா்ந்து பாா்த்திபனின் உடல் கூறாய்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.