ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது

வேளாங்கண்ணியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 11:22 pm IST

வேளாங்கண்ணியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண் உள்ளிட்ட இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் பாப்பாகோவில் புதுத்தெருவைச் சோ்ந்த ஞானசெளந்தரி (23) மற்றும் தஞ்சை மாவட்டம் மருதபட்டினத்தை சோ்ந்த ஞானசேகரன் (55) என்பதும், இருவரும் சட்டவிரோதமாக வேளாங்கண்ணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து கஞ்சா விற்ற ரூ. 6,400, கைப்பேசி மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.