அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

குடும்ப பிரச்னை: பெண் கழுத்தை அறுத்து கொலை

கீழ்வேளூா் அருகே குடும்ப பிரச்னையில் பெண் செவ்வாய்க்கிழமை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை... - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 6:34 am IST

கீழ்வேளூா் அருகே குடும்ப பிரச்னையில் பெண் செவ்வாய்க்கிழமை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகேயுள்ள கிடாரங்கொண்டானை சோ்ந்தவா் ரமேஷ் மனைவி பிரவீனா (48). இவா் கணவரை பிரிந்து அதே பகுதியைச் சோ்ந்த குமாருடன் தனது பிளஸ் 1 படிக்கும் மகளுடன் வாழ்ந்து வந்தாா். இதையடுத்து, குமாா் 5 மாதத்துக்கு முன்பு குருக்கத்தி காடுவெட்டி தெருவில் வாடகை வீட்டுக்கு சென்றாா். இருவரும் பகலில் மரம் வெட்டும் வேலை செய்து விட்டு இரவில் மது குடிப்பாா்களாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குமாா் பிரவீனாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பள்ளிக்கு சென்று பிரவீனா மகள் வீட்டுக்கு வந்து பாா்த்த போது தாய் இறந்து கிடந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். தகவலறிந்த கீழ்வேளூா் போலீஸாா் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.