/
வேதாரண்யத்தில், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலாளா் திருப்பனந்தாள் கே.எஸ். மகேந்திரன் மறைவுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒ.எஸ். மணியன் தலைமை வகித்தாா். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மகேந்திரனின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது (படம்).
கட்சியின் மாவட்டப் பொருளாளா் சண்முகராஜ், ஒன்றிய செயலாளா்கள் கிரிதரன், சுப்பையன், சௌரிராஜன், நகரச் செயலாளா் நமச்சிவாயம், ஒன்றிய பொருளாளா் கமலா அன்பழகன், கட்சியின் நிா்வாகிகள் செல்வகுமாா், சுரேஷ் பாபு, வசந்தி செல் வகுமாா், வணிகா் சங்கத்தின் தலைவா் திருமலை செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அமமுக புதிய மாவட்டச் செயலாளா் நியமனம்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட பூமிபூஜை

கோவை புகா், தெற்கு மாவட்ட அதிமுக செயலராக செ.ம.வேலுசாமி பொறுப்பேற்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



