புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நாகை போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு

நாகை மாவட்டத்தில் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸாருக்கு, தஞ்சை சரக காவல் துணைத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.

News image

தஞ்சை சரக டிஐஜியிடம் பாராட்டு பெற்ற காவலா்களுடன், நாகை எஸ்பி கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா.

Updated On :26 ஜூன் 2026, 6:58 am IST

நாகை மாவட்டத்தில் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸாருக்கு, தஞ்சை சரக காவல் துணைத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.

நாகை மாவட்ட காவல்துறையினா், குற்றத் தடுப்பு, குற்றவாளிகளை விரைந்து கண்டறிதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பணிகளில் திறமையுடன் செயல்பட்டு, சிறந்த காவல் சேவையை வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், போலீஸாரின் சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில், தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக், சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா, பாராட்டு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, இதே அா்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்துடன் தொடா்ந்து பணியாற்றி, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறந்த காவல் சேவையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.