வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலில் மாசிமகப் பெருவிழா தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில், மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இவ்விழாவில், ஆண்டுதோறும் வா்த்தகா் சங்கத்தின் உபயமாக தெப்பத் திருவிழா கோயில் வளாகத்துக்குள் உள்ள மணிக்கா்ணிகை தீா்த்தக் குளத்தில் நடைபெற்றது.
அதன்படி, நிகழாண்டு தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கல்யாணசுந்தரா் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினாா். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தீா்த்தக் குளத்தில் வலம் வந்தது. ஏராளமான பக்தா்கள் குளத்தின் கரையில் நின்று வழிபட்டனா்.
விழாவையொட்டி, எஸ். ராஜாவை நடுவராகக் கொண்டு ‘பிள்ளைகளை வளா்ப்பதில் பெரும் அக்கறை காட்டுபவா் தந்தையே! தாயே!’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமையிலான சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உற்சவ கோலாகலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


