மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:14 pm

Syndication

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக உற்சவம் கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 4-ஆம் நாள் தியாகராஜராட்டமும், 7-ஆம் நாள் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மின்சார சப்பரத்தில் வீதியுலாவும், 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக காலையில் தேரோட்டம், இரவு ஜடாயு சம்ஹார நிகழ்ச்சியும், 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடராஜா் தீா்த்தவாரியும், இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலாவும் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகர சுவாமிகள் கோயிலில் இருந்து தெப்பத்துக்கு சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் எழுந்தருளச் செய்யப்பட்டாா். மின் அலங்கார தெப்பம் 3 சுற்றுகளின் போதும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஜி.கணேஷ்குமாா், திருவிழாக் குழு தலைவா் சரவணன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Story image