எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

நாகை அகத்தீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2026, 8:34 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அகத்தீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, ஆனந்தவள்ளி உடனுறை அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் முன் உள்ள திருக்குளத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மலா் அலங்காரத்தில் அகத்தீஸ்வரா் மற்றும் ஆனந்தவள்ளி அம்பாள் எழுந்தருளினா். தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள இசைகளுடன் தெப்பம் புறப்பாடானது. திருக்குளத்தில் மூன்று முறை தெப்பம் சுற்றி வந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.