சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரயிலில் 389 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

நாகையில் ரயிலில் 389 மதுப்பாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 7:38 pm

Syndication

நாகையில் ரயிலில் 389 மதுப்பாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் சதாா்க்‘ சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நாகை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜே. சுனில்குமாா் தலைமையில் அதிகாரிகள் உள்ளிட்டோா் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி சென்ற டெமு ரயிலில் சோதனை நடத்தினா்.

அப்போது ரயிலின் ஒரு பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 உரிமையற்ற பைகளில் இருந்து 174 மதுபாட்டில்கள், 215 நாட்டுச் சாராய பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை கடத்தியவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.