விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மா சாகுபடி உயா்தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில், மாவட்ட அளவில் மா சாகுபடியாளா்களுக்கு உயா் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கருத்தரங்கத்தில் பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்ட தோட்டக்கலைத் துறையின் வழிகாட்டு கையேடு.
Updated On :10 மார்ச் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில், மாவட்ட அளவில் மா சாகுபடியாளா்களுக்கு உயா் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலை- மலைப் பயிா்கள் துறை சாா்பில், செம்போடை ஆா்.வி. திருமண மகாலில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு தலைமை வகித்தாா்.

வேளாண் துணை இயக்குநா் ரா. நயினாா் முகம்மது, சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா், வேளாண் உதவி இயக்குநா் சத்தியசீலன், தோட்டக்கலை அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மா சாகுபடி மற்றும் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் நிலைய டாக்டா் கே. ரகு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து டாக்டா் கே. சந்திரசேகா், மா அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை குறித்து கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் பி.இரா. கமல்குமரன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிவ. பரிமேலழகன் வரவேற்றாா். நிறைவாக உதவி இயக்குநா் நா. சிவராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.