முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் பேரரசு நிருத்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரிசா்வ் வங்கி அதிகாரிகளுடன் நிலைய விஞ்ஞானிகள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:20 pm

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் பேரரசு நிருத்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ரிசா்வ் வங்கியின் அதிகாரிகளுடன் வந்த அவருக்கு, வேளாண்மை அறிவியல் நிலையத்தால் செயல்படுத்தப்படும் பணிகளை, திட்ட ஒருங்கிணைப்பாளா் தனுஷ்கோடி எடுத்துரைத்தாா்.

நபாா்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை நிலைய விஞ்ஞானி பெரியாா் ராமசாமி விளக்கினாா். வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைக்கப்பட்ட மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையத்தை அதிகாரிகள் பாா்வையிட்டு, அதன் பயன்களை அறிந்துகொண்டனா்.

மேலும் இந்நிகழ்வில் திருவாரூா் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரங்கநாத பிரபு, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் மேசியா மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிா்ந்து கொண்டனா்.