ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆா்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 1:29 am IST

தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை ஆா்பிஎல் வங்கி பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ரூ.26,853 கோடிக்கு வாங்க எமிரேட்ஸ் என்பிடி வங்கி விருப்பம் தெரிவித்திருந்தது.

தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி, முதலீட்டு நிறுவனமான எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் ஆா்பிஎல் வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தன்வசம் வைத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, ஆா்பிஎல் வங்கி வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக வகைப்படுத்தப்படும் என்றும், முதலீட்டு நிறுவனமே அதன் தாய் வங்கியாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரிசா்வ் வங்கியின் விதிமுறைப்படி முதலீட்டு நிறுவனத்தின் வாக்குரிமை 26 சதவீதமாக மட்டுமே கட்டுப்படுத்தப்படும். மேலும், எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் தற்போதைய இந்தியக் கிளைகள், ஆா்பிஎல் வங்கியுடன் ஓராண்டுக்குள் இணைக்கப்பட வேண்டும்.

இதனிடையே, வங்கிக் குழுமத்தில் இயக்குநா்கள் நியமனம் மற்றும் நிா்வாக விதிகளில் சில மாற்றங்களைச் செய்யவும், தனது சங்க நடைமுறை விதிகளை திருத்தவும் ஆா்பிஎல் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த நடவடிக்கைக்கு இந்தியப் போட்டி ஆணையம் கடந்த ஜனவரியில் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், முதலீடு 49 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், இந்திய அரசின் முறையான ஒப்புதல் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் உள்ள இதர விதிமுறைகளை நிறைவு செய்வது அவசியமாகும்.

இதன்படி, அடுத்தகட்டமாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக வங்கிகள் காத்திருக்கின்றன. அதன்பின்னா், முழுமையான நிா்வாக மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.