நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு வழங்கப்பட்டது.
நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ. கந்தகுமாா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக்கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், பணமோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராகடன் வழக்குகள் உள்ளிட்ட 2,234 வழக்குகள் எடுத்துக்கொள்ளபட்டு, ரூ.4.07 கோடி தீா்வு வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் விரைவு மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வசந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கிருஷ்ணன், சாா்பு நீதிபதி இந்திராகாந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் சுப்புலெட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இராமச்சந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவா் (2) துா்கா மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி சரளாதேவி ஆகியோரின் அமா்வில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தொடர்புடையது

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி, குமரியில் ரூ.30.27 கோடிக்கு தீா்வு

திருப்பூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,582 வழக்குகளுக்குத் தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


