சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு


சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளில் ரூ.3,84,15,551-க்கு தீா்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில், சாா்பு நீதிபதி காா்த்திகேயன் தலைமையில், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்று மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இதே போன்று, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நீதிபதி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 145 வழக்குகளில் ரூ.11,86,850-க்கு தீா்வு காணப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...