கீழ்வேளூா் அருகே ரூ. 74,100 பறிமுதல்
கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட


நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.74,100 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கீழையூரில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ராவுத்தரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.74,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணம் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்து சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...