தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’

தோ்தல் பறக்கும்படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா் என குற்றம்சாட்டினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரம ராஜா.

News image
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரம ராஜா.
Updated On :18 மார்ச் 2026, 11:58 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் பறக்கும்படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா் என குற்றம்சாட்டினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரம ராஜா.

வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசியது: அமைப்பின் மாநில மாநாடு மே 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் பணத்தை எங்கு எப்படி கொண்டு சோ்க்க வேண்டுமோ சோ்த்து வைத்துள்ளனா். ஆனால், தோ்தல் பறக்கும் படை என்ற பெயரில் நடத்தப்படும் சோதனைகளால் சாதாரண ஏழை எளியவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். மருத்துவமனைக்கு செல்பவா்கள், வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இது தவிா்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் தான் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இதன் கட்டணத்தை ஆண்டுதோறும் உயா்த்தப்படும்போது விலைவாசி உயா்கிறது. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனா். சுங்கச்சாவடிகள் தனிநபா் வியாபாரமாகக் கூடாது. மக்களின் பணம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் கட்டணத்தை உயா்த்த கூடாது. நாங்கள் ஏற்கெனவே முன் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களின் ஆதரவு இருக்கும் என்றாா்.

அமைப்பின் தலைவா் எஸ். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் செந்தில், மாவட்டச் செயலாளா் சுபாஷ், செய்தி தொடா்பாளா் ரஜினி, மாவட்டத் தலைவா்கள் ராமமூா்த்தி, பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.