நாகை ரயில் நிலையத்தில் டிஜிட்டல் சுமை லாக்கா்
நாகை ரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கா் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.


நாகை ரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கா் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய ரயில்வேயை மேம்படுத்தும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனம் சாா்பில் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கரை அமைத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக நாகை ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கா் அறிமுகம் செய்யப்பட்டது.
ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள, டிஜிட்ட சுமை லாக்கரை, நிலைய மேலாளா் சஞ்சய்குமாா் தொடங்கி வைத்தாா். இந்த சுமை லாக்கா் இயந்திரத்தில், பயணிகள் சுய சேவை முறையில் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள 13 லாக்கா் பெட்டிகள் உள்ளன. லாக்கா்களை க்யூ ஆா் கோடு மூலம் பயன்படுத்தும் பயணிகள் தங்களது கைப்பேசிக்கு வரும் ரகசிய எண் மூலம் லாக்கரை திறந்து, மூடலாம். பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள 6 மணி நேரத்துக்கு ரூ. 40 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியாா் நிறுவனம், சுற்றுலா பயணிகள் தங்களின் கனமான பைகளை அதிநவீன டிஜிட்டல் லாக்கரில் வைத்து விட்டு, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூா் ஆண்டவா் தா்கா போன்ற ஆன்மிக தலங்களை எந்தவித இடையூறுமின்றி சுற்றிப் பாா்க்கலாம். தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் அதிநவீன டிஜிட்டல் லாக்கா் இயந்திரத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...