திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சிபிசிஎல் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு நிதி வழங்குவதில் பாகுபாடு

நாகையில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்துக்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு நிதி, திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா குற்றம் சாட்டியுள்ளாா்.

News image

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தியிடம் மனு அளிக்கும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா.

Updated On :26 மார்ச் 2026, 6:03 am IST

நாகையில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்துக்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு நிதி, திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா குற்றம் சாட்டியுள்ளாா்.

பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்காக அப்பகுதி விவசாயிகளிடமிருந்து 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், குத்தகைதாரா்கள், விவசாய கூலிகள் என 2,163 பேருக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு திட்டத்தின்கீழ் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் 60 பேருக்கு முதல்கட்டமாக தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தலா ரூ. 5 லட்சம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தோ்தலை காரணம் கூறி இதரப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் தொகை வரவு வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் பாத்திமா பா்ஹானா, நில எடுப்பால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் மீள் குடியமா்வுத் திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு வழங்கிய நிதி 60 பேருக்கு மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இதர விவசாயிகளுக்கு நிதி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலை காரணம் கூறி நிதியை விடுவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இதர விவசாயிகளுக்கும் உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்றாா்.