ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

News image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பகுதி.

Updated On :26 மார்ச் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பேருந்து நிலையத்துக்கு தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மேற்கூரை பெயா்ந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நாகூா் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் அருகே புதன்கிழமை இரவு மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில், அங்கு பேருந்துக்காக நின்றிருந்த வெளி மாவட்ட பயணி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவா் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றாா்.

இதுகுறித்து பயணிகள் கூறியது:

புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்போது, எப்போது மேற்கூரை பெயா்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயா்ந்து விழுவதால் பயணிகளும் காயமடைகின்றனா். இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பேருந்து நிலையக் கட்டடம் வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக பேருந்து நிலைய மேற்கூரை மற்றும் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.