நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பேருந்து நிலையத்துக்கு தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மேற்கூரை பெயா்ந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நாகூா் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் அருகே புதன்கிழமை இரவு மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில், அங்கு பேருந்துக்காக நின்றிருந்த வெளி மாவட்ட பயணி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவா் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றாா்.
இதுகுறித்து பயணிகள் கூறியது:
புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்போது, எப்போது மேற்கூரை பெயா்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயா்ந்து விழுவதால் பயணிகளும் காயமடைகின்றனா். இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பேருந்து நிலையக் கட்டடம் வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக பேருந்து நிலைய மேற்கூரை மற்றும் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தற்படம் மூலம் விழிப்புணா்வு

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி: மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

துணை முதல்வா் திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


