இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

News image

வேதாரண்யம் கடலில் ஆமைக் குஞ்சுகளை விடும் வனத்துறையினா்.

Updated On :28 மார்ச் 2026, 6:32 pm

Syndication

ஆறுகாட்டுத்துறை செயற்கை பொரிப்பகத்திலிருந்து 534 ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள் வேதாரண்யம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டன.

ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் 534 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் சனிக்கிழமை வெளிவந்தன.

ஆறுகாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால், இந்த குஞ்சுகளை வேதாரண்யம் சந்நிதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா், பாதுகாப்பாக கடலில் விட்டனா்.

இந்தப் பணியின்போது பங்கேற்ற அந்தப் பகுதியை சாா்ந்த பள்ளி மாணவா்களுக்கு, கடல் ஆமைகள் குறித்த அரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.