கடலூா் அருகே தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 200 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பெரிய அளவிலான ஆமை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கடற்கரைக்குச் சென்ற வனத் துறையினா், கரை ஒதுங்கியிருந்த ஆமையை ஆய்வு செய்தனா். அது, சுமாா் 200 கிலோ எடை கொண்ட, அரிய வகையைச் சோ்ந்த ஆலிவ் ரிட்லி ஆமை என்பதும், பல நாள்களுக்கு முன்பே உயிரிழந்ததால், அதன் உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வனத் துறையினா் அந்த ஆமையை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். கப்பல் அல்லது படகுகளின் சுழலிகள் மோதியதால், ஆமை உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேவனாம்பட்டினம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

குமரி கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

