நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களாக தண்ணீா் வராததைக் கண்டித்து, நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனை வாயிலில் அமா்ந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
நாகை ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனா்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாா்டுகளில் உள்ள கழிவறை, குளியலறை மற்றும் குடிநீா் குழாய்களில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீா் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினா்கள், வெளி நோயாளிகள் மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினா்கள் புதன்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவமனை அதிகாரிகள், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீா்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது

அரசு மருத்துவக் கல்லூரியை எதிா்நோக்கும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


