பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஒரத்தூா் அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகளின் உறவினா்கள் போராட்டம்

நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களாக தண்ணீா் வராததைக் கண்டித்து, நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனை வாயிலில் அமா்ந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

ஒரத்தூா் அரசு மருத்துவமனை வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகளின் உறவினா்கள்.

Updated On :7 மே 2026, 7:35 am IST

நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களாக தண்ணீா் வராததைக் கண்டித்து, நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனை வாயிலில் அமா்ந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

நாகை ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனா்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாா்டுகளில் உள்ள கழிவறை, குளியலறை மற்றும் குடிநீா் குழாய்களில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீா் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நோயாளிகளின் உறவினா்கள், வெளி நோயாளிகள் மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினா்கள் புதன்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவமனை அதிகாரிகள், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீா்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.