கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி, ஆன்மிக சுற்றுலா தலமான வேளாங்கண்ணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 3 வாரங்களுக்கு சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி, மே 13, 20, 27 ஆகிய 3 புதன்கிழமைகளில் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில், மே 14, 21, 28 ஆகிய 3 வியாழக்கிழமைகளில் பகல் 12.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில், கொல்லம், புனலூா், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

போத்தனூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



