திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் வரும் மே 13-ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கோடை காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் மே 13, 20, 28 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) பகல் 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06031) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் மே 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) வேளாங்கண்ணியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண் 06032) மறுநாள் காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.
பெட்டிகள் விவரம், நிற்கும் நிலையங்கள்: சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்கு பொருளாதார வகைப் பெட்டிகள், 6 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி இடம் பெற்றிருக்கும்.
இந்த ரயிலானது, நாகபட்டினம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புனலூா், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்!

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


