சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கு கோடைகால சிறப்பு ரயில் ஏப். 12 -ஆம் தேதி உள்ளிட்ட 3 நாள்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஏப். 12, 19, 26 ஆகிய (ஞாயிற்றுக்கிழமைகள்) தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06039) ஏப். 15, 22, 29 (புதன்கிழமைகள்) ஆகிய தேதிகளில் பிகாா் மாநிலம் பரோனி நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஏப். 15, 22, 29 ஆகிய தேதிகளில் பரோனி நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06040) ஏப். 18, 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டு அடுக்க பெட்டி, 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 10 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


