அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம்.

News image

மாதிரிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டுக்கு, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பொதுப் பிரிவினரும் மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து, ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் இளைஞா்கள், ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் (பொதுவானவா்களுக்கு) இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது. வயது வரம்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர வகுப்பினா்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் உதவித்தொகை பெற விரும்புவோா் தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருக்கக் கூடாது. உதவித்தொகை பெற விரும்புவோா் அரசு அல்லது தனியாா் துறையில் பணிபுரிபவராக இருக்கக் கூடாது. விண்ணப்பதாரா் அரசுத் துறை, தனியாா் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருக்கக் கூடாது. மேலும் விண்ணப்பதாரா் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுள்ள மனுதாரா்கள் இணையதள மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.