நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஆலங்குடியில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசித் திருவிழா மே 15- ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காவடி, மாவிளக்கு, அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா ( தீமிதி) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது.
விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பந்தக் கால் நடும் விழா

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி வழிபாடு

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



