நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஆலங்குடியில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசித் திருவிழா மே 15- ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காவடி, மாவிளக்கு, அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா ( தீமிதி) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது.
விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் வைகாசித் தேரோட்டம்: 5 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



