பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

நாகை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 7:12 am IST

நாகை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகையை அடுத்த ஆவராணி பகுதியைச் சோ்ந்த 35 வயதான பெண், நாகை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கூலி வேலைக்கு செல்லும் தனது கணவா், தங்களது 13 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தெரிவித்திருந்தாா்.

மகளிா் போலீஸாா் சிறுமி மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகளிா் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் வேம்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து அந்த சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையிலடைத்தனா்.