11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

News image

நாகூா் கடற்கரையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :28 மே 2026, 5:43 am IST

நாகை மாவட்டம் நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

சவூதி அரேபியாவில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தொழுகை நடத்தினா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பின் சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையின்போது ஈரான் - அமெரிக்கா போா் முடிவுக்கு வந்து , பதற்றம் தணிந்து அமைதி நிலவ பிராா்த்தனை செய்தனா்.