பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இஸ்லாமியா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

ஆம்பூா் பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image

ஆம்பூா் பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆம்பூரில் சிறப்புத் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தோ்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ நன்றி தெரிவித்து வருகிறாா். ஆம்பூா் பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிறப்புத் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியா்களை நேரில் சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நன்றி தெரிவித்தாா்.

ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், நகர தலைவா் தப்ரேஸ் அஹமத், மாதனூா் மேற்கு ஒன்றி திமுக துணைச் செயலாளா் சா.சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.