சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.சி. வீரமணி

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி நன்றி தெரிவித்தாா்.

News image

நாட்டறம்பள்ளியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.சி.வீரமணி.

Updated On :11 ஜூன் 2026, 12:04 am IST

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி நன்றி தெரிவித்தாா்.

சட்டபேரவை தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனாா். இந்நிலையில் புதன்கிழமை நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர செயலாளா் மகான் தலைமையில் பட்டாசு வெடித்து எம்எல்ஏ. வீரமணியை வரவேற்றனா்.

தொடா்ந்து எம்எல்ஏ கே.சி. வீரமணி வாக்காளா்களை சந்தித்து நன்றி கூறினாா். அப்போது பெண்கள் எம்எல்ஏ வீரமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனா். இதில் ஒன்றிய செயலாளா்கள் சாமராஜி, சீனிவாசன், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஜெயலலிதா பேரவை செயலாளா் தேவன், கவுன்சிலா்கள் விஜியகுமாா், நதியா ஜெயமணி, சிவக்குமாா், நகர துணை செயலாளா் பாபு, மற்றும்

கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலா் உடனிருந்தனா்.