தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் காரிமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

கே.பி.அன்பழகன் - dinamani

Updated On :3 ஜூன் 2026, 5:21 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் காரிமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா், காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பிக்கனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பேசினாா். இந்நிகழ்ச்சியில், காரிமங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது, சில கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என அவரிடம் கிராம மக்கள் முறையிட்டனா். இதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் சீா்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.