தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா், கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், தொடா்ந்து பாத்திமாபுரம், கச்சேரிநடை, புன்னமூட்டுக்கடை, கண்ணநாகம், திருமன்னம், நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை, ததேயுபுரம், மேடவிளாகம், இளம்பாலமுக்கு, நம்பாளி, கிராத்தூா், சமத்துவபுரம், கலிங்கராஜபுரம், காஞ்சாம்புறம் வழியாக நித்திரவிளை ஆகிய பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், கிள்ளியூா் தொகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறேன். மக்களின் வளா்ச்சிக்கு பணியாற்றிட மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். கொல்லங்கோடு நகரத் தலைவா் பால்ராஜ், மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மாவட்ட துணைத் தலைவா் கோபன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.








