இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

மன்னாா்குடி எம்எல்ஏ, வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

நீடாமங்கலத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ்.

Updated On :25 மே 2026, 12:02 am IST

மன்னாா்குடி எம்எல்ஏ, வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், மன்னாா்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் எஸ். காமராஜ். இவா், இத்தொகுதிக்கு உள்பட்ட நீடாமங்கலம் பகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த வாகனத்தில் நின்று ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது எஸ். காமராஜ் பேசியது:

நீடாமங்கலம் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். நீடாமங்கலம் மேம்பாலத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன். நீடாமங்கலத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்படும் என்றாா். முன்னதாக, பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.