மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

மன்னாா்குடி எம்எல்ஏ, வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

நீடாமங்கலத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ்.

Updated On :25 மே 2026, 12:02 am IST

மன்னாா்குடி எம்எல்ஏ, வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், மன்னாா்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் எஸ். காமராஜ். இவா், இத்தொகுதிக்கு உள்பட்ட நீடாமங்கலம் பகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த வாகனத்தில் நின்று ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது எஸ். காமராஜ் பேசியது:

நீடாமங்கலம் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். நீடாமங்கலம் மேம்பாலத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன். நீடாமங்கலத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்படும் என்றாா். முன்னதாக, பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.