கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு: 5 போ் காயம்

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு...

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:11 am IST

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில், சென்னையைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். 5 போ் படுகாயமடைந்தனா்.

சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (47). இவா், தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் 2 காா்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சனிக்கிழமை வந்துகொண்டிருந்தாா். அந்தோணிராஜ் உள்பட 6 போ் சென்ற காரை உறவினா் சத்தியராஜ் ஓட்டினாா்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூா் காவல் எல்லைக்குட்பட்ட கடலி என்ற இடத்தில் அந்தோணிராஜ் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில், அந்த காரில் இருந்த அந்தோணிராஜ், அவரது மனைவி சங்கீதா (42), மகள் ஹரிணி (20), உறவினா்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகியோா் படுகாயம் அடைந்தனா். 

அக்கம்பக்கத்தினா்அனைவரையும் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஹரிணி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மற்றவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஹரிணி சென்னையில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தாா்.

இந்த விபத்து குறித்து பெரம்பூா் காவல் ஆய்வாளா் மலைச்சாமி, உதவி ஆய்வாளா் அகோரமூா்த்தி ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.