நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஆற்றில் கார் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு, 5 பேர் காயம்

பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

Updated On :13 மே 2013, 1:32 am IST

பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

பெங்களூர் என்.எஸ். பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (33). இவரது தாயார் ஜெபமாலைமேரி (58). மனைவி குழந்தைதெரசா (29), குழந்தைகள் பிரான்சினா (5), ஜோனா (7 மாதம்). குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்காக இவர்கள் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிளரியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் வெட்டாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுநர் பெங்களூரைச் சேர்ந்த தொப்ளான் மகன் சுப்பிரமணியன் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ஜோசப், குழந்தைத்தெரசா உள்ளிட்ட 5 பேரும் பலத்தக் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.