ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி

News image
Updated On :25 ஜூலை 2017, 10:48 pm

DIN

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, விவசாயத்தை  நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக  இருந்து வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாள்களை 150 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.  
இத்திட்டத்தில் வேலை செய்த அனைவருக்கும் ஊதியம் நிலுவையின்றி வழங்க வேண்டும். அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் இத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குடவாசல்: குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் மருதவாணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (100 நாள் வேலை) கீழ் நடைபெறும் பணிகளுக்கான ஊதியத்தை ரூ.203-ஆக உயர்த்த வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை 20 கிலோவிலிருந்து 30 கிலோவாக உயர்த்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.15,000 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கெரக்கொரியா, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதேபோல் கொரடாச்சேரி,  நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.