அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திராவிடர்கழகப் பொதுக் கூட்டம்

திராவிடர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் 22-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை திராவிடர்கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:03 am

DIN

திராவிடர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் 22-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை திராவிடர்கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு  கட்சியின்  நகரச் செயலர் மு.ராமதாசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.க. மாநில பொதுச் செயலர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் சு.சிங்காரவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.  இதில் மாவட்டத் தலைவர்கள் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், இரா.கோபால், மாவட்டச் செயலர் பெ.வீரையன், மாநில பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி அமைப்பாளர் பி.ரமேஷ், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் வை.கௌதமன், ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 முன்னதாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, பாமணியில் உள்ள ஆர்.பி.சாரங்கன் நினைவு இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.