அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்; கணவர் தலைமறைவு

மன்னார்குடி அருகே  தூக்கிட்ட நிலையில் பெண் சடலமாக கிடந்தார். அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:09 pm

DIN

மன்னார்குடி அருகே  தூக்கிட்ட நிலையில் பெண் சடலமாக கிடந்தார். அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார்.
கோட்டூரை அடுத்துள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவரது மனைவி லில்லி(35). இவர்களுக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லில்லி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாக கிடப்பதைப் பார்த்தவர்கள் களப்பால் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த, காவல் ஆய்வாளர் பரந்தாமன், லில்லியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் செந்தில்குமார் தலைமை மறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து, களப்பால் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.